Thursday 2 June 2011

போலி விளம்பரங்கள் படுத்தும்பாடு

ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவர்களை தங்களது மாணவர்கள் என்று சில பயிற்சி வகுப்பு மையங்கள் பொய் விளம்பரம் செய்து வருகிறது.தங்கள் பயிற்சி மையங்களில் பயிலாத மாணவர்களின் பெயர்களை, தங்களது பயிற்சி மையத்தில் படித்ததால்தான், டாப் ரேங்க் எடுத்துள்ளனர் என்பது போன்று விளம்பரப்படுத்தியிருப்பதைப் பார்த்து பல மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உதாரணமாக டாப் ரேங்க மாணவர் ப்ருத்வி தேஜ் இம்மாடி, எந்த பயிற்சிக்கும் செல்லாமலே முதல் மாணராகத் தேர்வாகியுள்ளார். ஆனால், இவர் தங்கள் மாணவர் என்று ஒரு பயிற்சி நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவர் கூறுகையில், நான் 11ம் வகுப்பு படிக்கும் போது என் பெயருக்கு ஒர பயிற்சி நிறுவனத்தில் இருந்து நோட்ஸ்கள் வந்தன. ஆனால் அந்த நிறுவனத்தைப் பற்றி அதற்கு முன்பும் சரி, பின்னரும் நான் வேறு எதையும் அறிந்திருக்கவில்லை.  அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவும் இல்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டகள் கழித்து, இப்போது நான் டாப் ரேங்க் எடுத்ததற்கு அந்த நிறுவனம் சொந்தம் கொண்டாடுவதில் எந்த அடிப்படையும் இல்லை என்று கூறுகிறார்.இது போல பல மாணவர்கள் தங்கள் பெயர் இது போன்ற விளம்பரத்தில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து புகார்களும் கொடுத்துள்ளனர்.சில மாணவர்கள், நாங்கள் கோச்சிங் சென்டரில் புத்தகங்கள் மட்டுமே வாங்கியுள்ளோம். வகுப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் அங்கு படித்த மாணவர்கள் என்று அந்த பயிற்சி நிறுவன விளம்பரங்களில் போடப்பட்டுள்ளது.சில கோச்சிங் சென்டர்கள், நேரடியாக டாப் ரேங்க் எடுத்த மாணவர்களிடம், அவர்களது பெயரை விளம்பரத்தில் போட்டுக்கொள்ள பணம் கொடுப்பதாக பேரம் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.இது குறித்து பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆந்திராவைச் சேர்ந்த பொங்குரு நாராயணா என்பவர் கூறுகையில், பயிற்சி நிறுவனங்கள் டாப் ரேங்க் மாணவர்களை உருவாக்குவதை விட்டுவிட்டு, டாப் ரேங்க் மாணவர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஒரு சில பயிற்சி நிறுவனங்கள் டாப் ரேங்க் மாணவர்களை தங்கள் விளம்பரங்களில் இடம்பெறச் செய்ய பல லட்சம் ரூபாய் வரை செலவிடுகின்றன என்கிறார்.

No comments:

Post a Comment